செய்திகள் (Tamil News)

தஞ்சையில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-07-26 12:23 GMT   |   Update On 2017-07-26 12:23 GMT
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் தஞ்சை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் தஞ்சை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

போக்குவத்து கழக வரவு, செலவு வித்தியாச தொகையை அரசு ஏற்க வேண்டும். 1.4.13-ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அன்றே பண பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில பொது செயலாளர் பாருக், சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் கண்ணன், தொ.மு.ச. பணிமனை செயலாளர் ராஜேந்திரன ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள்.

சி.ஐ.டி.யூ. மாநில துணை தலைவர் முத்துவேல்,சி.ஐ.டி.யூ. சம்மேளன குழு உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News