செய்திகள் (Tamil News)

சிவகிரி அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து ஆசிரியர் தற்கொலை

Published On 2017-09-15 11:32 GMT   |   Update On 2017-09-15 11:32 GMT
சிவகிரி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அருகன்குளத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது31) . இவர் குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள வன்னியூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலெட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் காளிமுத்து மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று மாலை வீட்டின் அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் காளிமுத்துவை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப் பதிந்து காளிமுத்து குழந்தை இல்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News