செய்திகள் (Tamil News)

ராஜபாளையம் அருகே பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு

Published On 2017-09-28 09:07 GMT   |   Update On 2017-09-28 09:07 GMT
ராஜபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து சேத்தூர் புறக்காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் காந்திநகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி சிங்கம்மாள் (வயது 55). இவர் கொல்லங்கொண்டானில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று வேலை முடிந்து சிங்கம்மாள் தளவாய்புரம் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

முப்புலி மாடசாமி கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று சிங்கம்மாளை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

Similar News