செய்திகள் (Tamil News)

சோழவந்தானில் வீடு புகுந்து நகை கொள்ளை

Published On 2018-02-02 09:29 GMT   |   Update On 2018-02-02 09:29 GMT
சோழவந்தானில் வீடு புகுந்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 35). இவரது மனைவி பிரின்ஸி. இவர்களது வீடு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ளதால் எப்போதும் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.

நேற்று சசிக்குமார், தனது மனைவி மற்றும் தாயார் அமராவதியுடன் பாலமேடு அருகே உள்ள மேட்டுப்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்கு வீட்டை பூட்டிவிட்டுச் சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

இரவு வீடு திரும்பிய சசிக்குமார், கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்தார். உடனே சமயநல்லூர் போலீஸ் டி.எஸ்.பி. மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கிரேஸி சோபியாபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரே கைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Similar News