செய்திகள் (Tamil News)

முத்துப்பேட்டையில் வீட்டில் தீப்பிடித்து ரூ.3 லட்சம் சேதம்

Published On 2018-02-02 10:58 GMT   |   Update On 2018-02-02 10:58 GMT
முத்துப்பேட்டையில் சமையல் செய்யும் போது எதிர்பாராதவிதமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டை அடுத்த ஆலங்காடு ஆயிரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சவுந்தராஜன் மகன் பன்னீர்செல்வம்(50). இவர் ஆலங்காடு கடைதெருவில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்த மனைவி இந்துமதி சமையல் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக வீட்டின் கூரையில் தீ பிடித்தது.இதனைக்கண்டு இந்துமதி கூச்சலிட்டார். அப்போது அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென்று பரவி எரிந்தது.

இதனையடுத்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் வீட்டின் கூரை முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த பீரோக்கள், அதில் இருந்த துணி மணிகள், பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், கட்டில், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் மொத்தம் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக என்று கூறப்படுகிறது.

இதுபற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News