செய்திகள்

விழுப்புரத்துக்கு 18-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை

Published On 2018-05-15 04:10 GMT   |   Update On 2018-05-15 04:10 GMT
விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகிற 18-ந்தேதி வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறார். #TNGovernor #BanwarilalPurohit
விழுப்புரம்:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்.

அந்த வகையில் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விழுப்புரத்துக்கு கவர்னர் வருகை தருகிறார்.

அன்று மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் அவர், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். கவர்னர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News