செய்திகள்

போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார்

Published On 2018-05-16 08:26 GMT   |   Update On 2018-05-16 08:26 GMT
போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த கைதி சந்துருவை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே தனியார் செங்கல் சூளை உள்ளது.

இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு வேலை பார்த்து வந்த திருக்கோவிலூரை அடுத்த தினிக்கலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்துருவை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் இருந்த போது சந்துரு கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். அப்போது திடீரென அவர் சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

இன்று காலை அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News