செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்கள் 29-ந்தேதி கடையடைப்பு போராட்டம்

Published On 2018-05-26 06:12 GMT   |   Update On 2018-05-26 06:12 GMT
டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் 29-ந்தேதி 1 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #TASMAC

சென்னை:

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் இன்னும் தொகுப்பு ஊதியம்தான் பெறுகிறார்கள். 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணியாற்றினால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது அரசு விதியாகும். ஆனால் 13 வருடமாக வேலை பார்த்தும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

இது மட்டுமல்ல, கால முறை ஊதியம், அரசு துறைகளில் மாற்றுப் பணி உள்பட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் 29-ந்தேதி (செவ்வாய்) 1 நாள் கடையடைப்பு தமிழகம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.


இதற்காக சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் வருகிற 28-ந்தேதி பேச்சு வார்த்தைக்கு வருமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று மாநில நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

பேச்சுவார்த்தை முடிவு ஒருபக்கம் இருந்தாலும் அதுவரை வேலை நிறுத்தம் தொடர்பான பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று சங்க நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #TASMAC

Tags:    

Similar News