செய்திகள்

புதுவையில் வடமாநில பெண்ணிடம் நூதன முறையில் ரூ.12 லட்சம் மோசடி

Published On 2018-05-26 08:44 GMT   |   Update On 2018-05-26 08:44 GMT
புதுவையில் வடமாநில பெண்ணிடம் நூதன முறையில் ரூ.12 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

வடமாநிலத்தை சேர்ந்தவர் பிங்கி மசூந்தா (வயது 40). இவர் வைத்திக்குப்பம் பகுதியில் அரவிந்தர் அவென்யூ நிவாசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவரிடம் பேஸ்-புக் மூலம் மிக்கேல் ஆண்டனி என்பவர் பழக்கம் ஆனார். இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதாக பிங்கி மசூந்தாவிடம் கூறியதின் அடிப்படையில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரத்து 800-ஐ மிக்கேல் ஆண்டனியின் வங்கி கணக்கில் பிங்கி மசூந்தா செலுத்தினார்.

ஆனால், பல நாட்கள் ஆகியும் பொருட்களை மிக்கேல் ஆண்டனி டெலி வரி செய்யவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த பிங்கி மசூந்தா இதுகுறித்து சோலைநகர் போலீசில் புகார் செய்தார்.

இந்த நூதன மோசடி குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
Tags:    

Similar News