செய்திகள் (Tamil News)
மதுரையில் ஓடும் பஸ்சில் இறங்கிய முதியவர் பலி
மதுரையில் ஓடும் பஸ்சில் இறங்கிய முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது75). இவர் நேற்று ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வந்தார். மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு டவுன் பஸ்சில் சிக்கந்தர்சாவடிக்கு சென்றார்.
சிக்கந்தர்சாவடி பஸ் நிறுத்தம் அருகே பஸ் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது அவர் பஸ்சில் இருந்து திடீரென இறங்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.