செய்திகள் (Tamil News)

மதுரை அருகே தொழில் நஷ்டத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2018-05-28 10:26 GMT   |   Update On 2018-05-28 10:26 GMT
மதுரை அருகே தொழில் நஷ்டத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை கோ.புதூர் சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சபரிகண்ணன் (வயது29). இவர் தனது உறவினர் ராஜூ என்பவருடன் போடிநாயக்கன்பட்டியில் வசித்து வந்தார்.

தனியார் நிறுவன பொருட்கள் விற்பனை செய்து வந்த சபரிகண்ணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபரிகண்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News