செய்திகள் (Tamil News)

மதுரை அருகே வீடு புகுந்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது

Published On 2018-05-31 11:51 GMT   |   Update On 2018-05-31 11:51 GMT
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.

மதுரை:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி கருப்பாயி. இவர்களது 13 வயது மகள் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை உப்படாபட்டியைச் சேர்ந்த அஜித் (17), திரவியம் (16) ஆகிய 2 பேர் வீடு புகுந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமி கூச்சல் போட்டவுடன் சிறுமியின் தாயார் கருப்பாயி வீட்டுக்கு ஓடி வந்தார். அப்போது 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து கருப்பாயி மேலவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், திரவியம் ஆகிய 2 பேரையும் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News