செய்திகள் (Tamil News)

நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலைவீச்சு

Published On 2018-05-31 12:47 GMT   |   Update On 2018-05-31 12:47 GMT
நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை திருநகர் நேதாஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி பாப்பா (வயது 70). இவர் நேற்று கருவேலம்பட்டி ரெயில்வே கேட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் பாப்பா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து பாப்பா ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News