செய்திகள்
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
கூடுதல் கட்டணம் பெறும் அரசு நிதியுதவி பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை தவிர கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்திட வேண்டும் என அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதல் தொகை வசூல் செய்யும் பள்ளிகள் பற்றி எழுத்துப் பூர்வமாக மனுவினை திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை தவிர கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்திட வேண்டும் என அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதல் தொகை வசூல் செய்யும் பள்ளிகள் பற்றி எழுத்துப் பூர்வமாக மனுவினை திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.