செய்திகள் (Tamil News)

மதுரையில் லாரி மோதி லோடுமேன் தலை நசுங்கி பலி

Published On 2018-06-08 13:13 GMT   |   Update On 2018-06-08 13:13 GMT
லாரி மோதி லோடுமேன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலியான தொழிலாளிக்கு நிதியுதவி கேட்டு சக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை:

மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 32). லோடுமேனான இவர் நேற்று இரவு பழங் காநத்தம் மாடக்குளம் மெயில் ரோடு அருகே உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் சரக்குகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீ ரென்று கட்டுப்பாட்டை இழந்து செந்தில்நாதன் மீது மோதியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த கரிமேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தில்நாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் நாதனுக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் விபத்தில் இறந்த செந்தில்நாதன் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கக்கோரி பழங்கா நத்தத்தில் சக தொழிலாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News