செய்திகள் (Tamil News)

ராமநாதபுரத்தில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-09 17:08 GMT   |   Update On 2018-06-09 17:08 GMT
ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன் பணி நிரவல் கலந்தாய்வை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகே சன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் லிங்க துரை, மாவட்ட அமைப்புச் செயலர் கனகராஜ், மகளி ரணி செயலர் மகாராணி முன்னிலை வகித்தனர்.

பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதால் பணிநிரவல் கலந்தாய்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். மொத்த அதிகாரமும் ஒருவரிடமே இருக்கும் முறையை அரசு கைவிட வேண்டும். கிராமப்புற பள்ளிகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டப் பொருளாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட துணைத் தலைவர் அந் தோணி சவரி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News