செய்திகள் (Tamil News)

மதுரை நகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 வாலிபர்கள் கைது

Published On 2018-06-12 09:19 GMT   |   Update On 2018-06-12 09:19 GMT
மதுரை நகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை தெப்பக்குளம் கேட்லாக் ரோடு, ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது31). இவர் அதே பகுதியில் நடந்து சென்றபோது மேல அனுப்பானடி தமிழன் தெரு நாகராஜ் மகன் சசிக்குமார் (22), நடுத்தெரு ஜோதிராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (21), பாண்டி மகன் பால்பாண்டி (20) ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.250-ஐ பறித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

வில்லாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மருதுபாண்டி, ஆட்டோ டிரைவரான இவரிடம் மேல அனுப்பானடி நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சோலையப்பன் மகன் பிரபாகரன், கேட்லாக் ரோடு முனீஸ்வரன் மகன் சூர்யா, பாண்டி(24) ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.700-ஐ பறித்தனர்.

இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன் (38). இவர் சிந்தாமணி ரோட்டில் நடந்து சென்றபோது தத்தனேரி பாண்டி (32) என்பவர் மிரட்டி ரூ.280-ஐ வழிப்பறி செய்ததாக அவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

மதிச்சியம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் கிருஷ்ணன் (21) இவர் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் நடந்து சென்ற போது ராமராயர் மண்டபம் புளியந்தோப்பை சேர்ந்த செல்லப்பாண்டி (22), நடுத்தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் அஜீத் (19) ஆகியோர் கத்தியை காட்டி ரூ.600-ஐ பறித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News