செய்திகள்

ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2018-06-28 17:07 GMT   |   Update On 2018-06-28 17:07 GMT
ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் வெளிபட்டினம் பகுதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சுற்றி உள்ள பகுதி நீர்நிலை புறம்போக்கு பகுதி என்று அந்த இடத்தை காலி செய்ய நகரசபை அதிகாரிகள் உத்தரவிட்டனர். கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகரசபை அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர். இதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளையும், ஜே.சி.பி. எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய அவகாசம் வழங்கிய அதிகாரிகள் திங்கட்கிழமை மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்து சென்றனர்.

இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் கோவில் நிலத்தில் கோவிலுக்கு வாடகை செலுத்தி முறையாக குடியிருந்து வருவதாகவும், சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என்றும் தெரிவித்து வாதிட்டனர். அதற்கு நகரசபை அதிகாரிகள், அலுவலக பதிவேடுகளின்படி மேற்கண்ட இடங்கள் ஊருணி நீர்நிலை புறம்போக்கு பகுதி என்று இருப்பதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். 
Tags:    

Similar News