செய்திகள்

அறந்தாங்கி பஸ் நிலையத்தில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்

Published On 2018-07-05 14:53 GMT   |   Update On 2018-07-05 14:53 GMT
பொது இடங்களில் புகைபிடிக்க தடை உள்ள நிலையில் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் தடையை மீறி புகை பிடித்த 9 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி:

பொது இடங்களில் புகைபிடிக்க தடை உள்ள நிலையில் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் தடையை மீறி ஏராளமானவர்கள் புகை பிடித்து வந்தனர். இதனால் மற்ற பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

இதுகுறித்து அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் நவேந்திரன் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதாரப்பிரிவினர், அறந்தாங்கி பஸ் நிலையத்தில் புகைபிடித்த 9 பேரிடம் தலா ரூ.100 வீதம் அபராதத் தொகை பெற்றனர். இதனால் பஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News