செய்திகள்
திருமங்கலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன்
திருமங்கலம் அருகே 13 வயது மாணவி ஒருவர், தாயின் கள்ளக்காதலன் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
பேரையூர்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கல்லப்பட்டியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனது தாயார் ஜீவா குடும்ப பிரச்சினை காரணமாக தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எங்களது வீட்டுக்கு மாசானம் (வயது 45) என்பவர் அடிக்கடி வந்து போவார்.
கடந்த வாரம் மாசானம் என்னை கற்பழிக்கும் நோக்கத்தில் பாலியல் தொந்தரவு செய்தார். இதற்கு உடந்தையாக எனது தாயும் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஜீவா, அவரது கள்ளக்காதலன் மாசானம் ஆகியோர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கல்லப்பட்டியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனது தாயார் ஜீவா குடும்ப பிரச்சினை காரணமாக தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எங்களது வீட்டுக்கு மாசானம் (வயது 45) என்பவர் அடிக்கடி வந்து போவார்.
கடந்த வாரம் மாசானம் என்னை கற்பழிக்கும் நோக்கத்தில் பாலியல் தொந்தரவு செய்தார். இதற்கு உடந்தையாக எனது தாயும் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஜீவா, அவரது கள்ளக்காதலன் மாசானம் ஆகியோர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.