செய்திகள்

லாலாபேட்டை அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2018-07-21 13:16 GMT   |   Update On 2018-07-21 13:16 GMT
லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானர்.
லாலாபேட்டை:

லாலாபேட்டை அருகே உள்ள மகிளிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 34). இவர் நேற்று மகிளிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. 

இதில் சந்திரசேகரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News