செய்திகள்

முசிறியில் லாரி மோதி வாலிபர் பலி

Published On 2018-07-22 13:11 GMT   |   Update On 2018-07-22 13:11 GMT
முசிறியில் நடந்து சென்ற வாலிபர் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறி மேலசாலியர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 35). இவர் நேற்று இரவு முசிறி பழைய பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது திருச்சியை நோக்கி காய்கறி ஏற்றி வந்த லாரி எதிர்பாரதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. பின்னர் லாரி நிற்காமல் சென்று விட்டது. 

உடனே அக்கம் பக்கத்தினர் லட்சுமணணை மீட்டு சிகிச்சைக் காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News