செய்திகள்

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து- வாலிபர் பலி

Published On 2018-07-27 14:17 GMT   |   Update On 2018-07-27 14:17 GMT
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கருங்கல்:

கருங்கல்லை அடுத்த மாதவபுரம் சடையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் பீட்டர் (வயது 18). இவரும், இவரது நண்பர் அய்யன் விளை பகுதியை சேர்ந்த லிபின் (21) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் தொலையாவட்டம் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொலையா வட்டம் முந்திரி ஆலை அருகே வரும்போது எதிரே அஞ்சுகிராமத்தில் இருந்து தொலையா வட்டத்திற்கு   காரில் ராஜாவூர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் கிளை மண்ட் (30) என்பவர் வந்து கொண்டு இருந்தார். 

திடீரென்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜாண் பீட்டர் பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி எதிரே வந்த கார் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு ஜாண் பீட்டர், மோட்டார் சைக்கிள் பின்னால் இருந்த லிபின் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு கருங்கல் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லிபின் இறந்து விட்டதாக கூறினார்கள்.

இது குறித்து ஜார்ஜ்கிளை மண்ட் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News