செய்திகள்
கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் 10 லட்சம் இழப்பீடு - கலெக்டர் அலுவலகத்தில் மனு
கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் 10 லட்சம் இழப்பீடு வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தல்.
சேலம்:
கட்டுமான தொழிலாளர்கள் வாழும் உரிமையை நிலைநாட்ட தமிழகம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு இயக்கத்தை ஜூலை 1-ந்தேதி முதல் 30-ந் தேதியான இன்று வரை நடத்தினர். இதையொட்டி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது-
நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்து 30 நாட்களில் வழங்க வேண்டும், ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பாக வழங்க வேண்டும்,
இயற்கை மரணத்திற்கு 5 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பதிவு ஆவணப்படி 60 வயதை அடைந்தால் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, பி.எப். வைப்பு திட்டங்களை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. #Tamilnews