செய்திகள் (Tamil News)
கோவில்களை ஆய்வு செய்து அறிக்கையளிக்க மாவட்ட நீதிபதிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் புராதன சின்னங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிபதிகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புராதன சின்னங்கள் சிதிலமடைந்து காணப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணையின் முடிவில், “அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் உள்ள புராதன சின்னங்களின் பாதுகாப்பு குறித்து அனைத்து மாவட்ட நீதிபதிகளும் நேரடி ஆய்வு செய்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.