செய்திகள் (Tamil News)

திண்டுக்கல் மாநகரில் மீண்டும் தலை தூக்கும் குடிநீர் பிரச்சினை

Published On 2018-08-05 10:59 GMT   |   Update On 2018-08-05 10:59 GMT
திண்டுக்கல் மாநகரில் மீண்டும் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சி யில் 48 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.இவர்களுக்காக ஆத்தூர் காமராஜர் அணை மூலமும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

தற்போது பருவ மழை பொய்த்துப்போனதால் காமராஜர் அணையின் நீர் மட்டம் 2 அடிக்கும் கீழ் உள்ளது. இதனால் மாநகர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் போதுமானதாக இல்லை.

எனவே நகர் பகுதியில் தினசரி எங்கு பார்த்தாலும் காலிக்குடங்களுடன் மக்கள் அலைந்து திரியும் நிலை உருவாகியுள்ளது. கோடை காலத்தைப போல் இப்போது குடிநீர் பிரச்சினை மீண்டும் தலை தூக்கியுள்ளதால் திண்டுக்கல் நகர மக்கள் விரக்தியில் உள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்தாலும் மக்கள் திருப்தியடைந்த பாடில்லை. எனவே பருவ மழை கைகொடுத்தால்தான் காமராஜர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும். இல்லையென்றால் இன்னும் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் தலைவிரித்தாடும் என்பதில் அய்யமில்லை.

Tags:    

Similar News