செய்திகள்
சிதம்பரம் அருகே 8-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்
சிதம்பரம் அருகே தோழிகளுடன் விளையாடி விட்டு வீடு திரும்பிய 8-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிபடைபூதக்கேணி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜலாவுதீன். இவரது மகள் ஜாஹீத் பர்வின் (வயது 13).
இவள் அங்குள்ள அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலையில் ஜாஹீத் பர்வின் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் கீழ் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
பின்னர் அவள் தனது வீட்டுக்கு சென்றாள். சிறிது நேரத்தில் ஜாஹீத் பர்வின் திடீரென்று மயங்கி விழுந்தாள். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவளை சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜாஹீத் பர்வின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிபடைபூதக்கேணி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜலாவுதீன். இவரது மகள் ஜாஹீத் பர்வின் (வயது 13).
இவள் அங்குள்ள அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலையில் ஜாஹீத் பர்வின் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் கீழ் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
பின்னர் அவள் தனது வீட்டுக்கு சென்றாள். சிறிது நேரத்தில் ஜாஹீத் பர்வின் திடீரென்று மயங்கி விழுந்தாள். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவளை சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜாஹீத் பர்வின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.