செய்திகள்
விபத்தில் சிக்கிய தம்பதியை காப்பாற்றிய திமுக பொறுப்பாளர்
முதுகுளத்தூர் அருகே விபத்தில் சிக்கிய கணவன், மனைவியை காப்பாற்றிய திமுக பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை பொதுமக்கள் பாராட்டினர்.
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி செல்லும் வழியில் உடைகுளம் அருகில் சாம்பகுளம் விலக்கு ரோட்டில் மணக்குளத்தை சேர்ந்த செந்தமிழ் (42), கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து இருந்து தவறி விழுந்தனர். இதில் செந்தமிழ் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்து பகுதியில் உதவிக்கு யாரும் இல்லாமல் தம்பதிகள் தவித்தனர்.
அந்த வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்ற தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துராம லிங்கம் விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தார்.
கமுதி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செந்தமிழை பரிசோதித்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை பொதுமக்கள் பாராட்டினர். விபத்து குறித்து கீழத் தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி செல்லும் வழியில் உடைகுளம் அருகில் சாம்பகுளம் விலக்கு ரோட்டில் மணக்குளத்தை சேர்ந்த செந்தமிழ் (42), கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து இருந்து தவறி விழுந்தனர். இதில் செந்தமிழ் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்து பகுதியில் உதவிக்கு யாரும் இல்லாமல் தம்பதிகள் தவித்தனர்.
அந்த வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்ற தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துராம லிங்கம் விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தார்.
கமுதி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செந்தமிழை பரிசோதித்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை பொதுமக்கள் பாராட்டினர். விபத்து குறித்து கீழத் தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews