செய்திகள்

ராமநாதபுரம் அருகே நர்சிங் மாணவியிடம் கேலி - வாலிபர் மீது போக்சோ வழக்கு

Published On 2018-08-27 07:19 GMT   |   Update On 2018-08-27 07:19 GMT
நர்சிங் மாணவியை கேலி செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள சிக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், நர்சிங் படித்து வந்தார். இவர் கல்லூரி சென்று வந்தபோது, களத்தாவூரைச் சேர்ந்த முனியசாமி மகன் பிரதாப் (24) அடிக்கடி கேலி-கிண்டல் செய்து வந்துள்ளார்.

மேலும் அவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதனை மாணவி ஏற்கவில்லை. இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை தேடி வருகிறார்.
Tags:    

Similar News