செய்திகள்

அரசு பேருந்துகளில் சீட் பெல்ட் கேட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

Published On 2018-08-27 10:36 GMT   |   Update On 2018-08-27 10:36 GMT
அரசு பேருந்துகளில் சீட் பெல்ட், சொகுசு இருக்கை போன்றவற்றை செய்து பேருந்துகளின் தரம் உயர்த்தக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ChennaiHC
சென்னை:

மக்களின் தேவைகளை சமூக ஆர்வலர்கள் சிலர் பொதுநல வழக்குகளாக நீதிமன்றங்களில் முறையிட்டு, எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி சமூக சேவை செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் பொதுநல வழக்குகள் தொடர்வதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்வதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதுபோல் விளம்பரத்துக்காக பொதுநல வழக்கு தொடர்பவர்களை நீதிமன்றம் கண்டிப்பதுடன் அபராதமும் விதித்து தக்க பாடம் புகட்டி வருகிறது.

இந்நிலையில், அரசு பேருந்துகளில் சீட் பெல்ட், சொகுசு இருக்கை போன்ற வசதிகள் செய்து கொடுத்து, பேருந்துகளின் தரம் உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படுவதாக கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கு முற்றிலும் விளம்பரத்துக்காக தொடரப்பட்டது என கண்டித்ததுடன், ஜவஹர்லால் சண்முகத்துக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #ChennaiHC
Tags:    

Similar News