செய்திகள்

வியாசர்பாடியில் ஹெல்மெட் அணியாத 44 பேருக்கு அபராதம்

Published On 2018-08-28 09:10 GMT   |   Update On 2018-08-28 09:10 GMT
வியாசர்பாடியில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாத 44 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பூர்:

வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இன்று காலை, அம்பேத்கர் கல்லூரி அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் உட்கார்ந்திருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 44 பேருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்தார். குடிபோதையில் வண்டி ஓட்டியவருக்கு ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News