செய்திகள்

அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய எதிர்க்கட்சிகள் - டாக்டர் தமிழிசை கண்டனம்

Published On 2018-08-31 09:03 GMT   |   Update On 2018-08-31 09:03 GMT
கலைஞர் புகழ் வணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட பல கட்சி தலைவர்கள் பா.ஜனதாவை விமர்சித்ததை அரசியல் அநாகரீகம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டித்துள்ளார். #TamilisaiSoundararajan
சென்னை:

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரான பிறகு தனது ஏற்புரையில் பா.ஜனதா எதிர்ப்பை கடுஞ்சொற்களால் பேசிய நிலையிலும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞருக்கு மரியாதை செலுத்த நிதின் கட்கரி கலந்து கொண்டது அரசியல் நாகரீகம்.

ஆனால் அதே கூட்டத்தில் மற்றவர்கள் கலைஞரை மறந்து பா.ஜனதாவை விமர்சித்தது அநாகரீகம்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமதே என்ற கையேட்டை மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். முதலில் அதை அண்ணன் அழகிரிக்கு கொடுத்திருக்கலாம்.

காவியை பற்றி விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் காவி பறக்கும் காலம் வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan
Tags:    

Similar News