செய்திகள்

அரக்கோணம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

Published On 2018-09-13 12:44 GMT   |   Update On 2018-09-13 12:44 GMT
அரக்கோணம் அருகே பைக் விபத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்:

திருத்தணியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 43). அதேபகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (40). இவர்கள் இருவரும் நேற்றிரவு பைக்கில் அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருத்தணி சாலை எம்.ஆர்.எப். கம்பெனி அருகே வந்த போது எதிரே சென்ற மற்றோரு பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கிவீசபட்டு பலத்த காயமடைந்தனர்.

இதனை கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஜெகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News