செய்திகள் (Tamil News)

திருமணத்துக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2018-09-15 08:54 GMT   |   Update On 2018-09-15 08:54 GMT
கோவை போத்தனூர் அருகே திருமணம் செய்வதற்கு பெண் கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள சுந்தராபுரம் கே.வி.கே. நகரை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகன் மோகன் குமார் (வயத 27). இவர் கடந்த 2 வருடங்களாக வளைகுடா நாடான சார்ஜாவில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகன்குமார் விடுமுறையில் ஊருக்கு திரும்பினார்.

இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மணப்பெண்ணை தேடினர். ஆனால் எந்த பெண்ணும் அமையவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மோகன் குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திருமணம் செய்வதற்கு பெண் கிடைக்காத விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மோகன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News