செய்திகள்

கொடுங்கையூரில் கர்ப்பிணி மயங்கி விழுந்து திடீர் உயிரிழப்பு

Published On 2018-09-27 09:34 GMT   |   Update On 2018-09-27 09:34 GMT
கொடுங்கையூரில் கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:

கொடுங்கையூரை சேர்ந்தவர் பார்த்திபன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதமாகிறது. சோனியா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை சோனியாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பார்த்திபன் கொடுங்கையூர், அம்பேத்கார் நகரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச்சென்றார். சோனியா உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News