செய்திகள் (Tamil News)

மனைவியுடன் தகராறு- தட்டிக்கேட்ட உறவினருக்கு சரமாரி அடி-உதை

Published On 2018-10-01 16:03 GMT   |   Update On 2018-10-01 16:03 GMT
மனைவியுடன் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினருக்கு சரமாரி அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது47). இவர் சம்பவத்தன்று இரவு திருமங்கலம்-சோழவந்தான் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது வாகைகுளம் சந்திப்பில் உறவினர் ரமேஷ் (32) மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

முத்து அவர்களை சமரசப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அவரது தந்தை செல்வராஜ் (67) ஆகியோர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் முத்துவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுதொடர்பாக திருமங்கலம் டவுன் போலீ சில் முத்து புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News