செய்திகள்

வீட்டு பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் தங்கம், வைர நகைகள் கொள்ளை

Published On 2018-10-04 08:54 GMT   |   Update On 2018-10-04 08:54 GMT
சோழிங்கநல்லூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:

நீலாங்கரை சந்திப்கலா அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கமலேஷ். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த தங்கம்- வைர நகைகள் கொள்ளை போயிருந்தன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News