செய்திகள்

பெண் பார்க்க அழைப்பது போல நடித்து வாலிபரிடம் நூதன முறையில் கொள்ளை- 3 பெண்கள் துணிகரம்

Published On 2018-10-24 07:04 GMT   |   Update On 2018-10-24 07:04 GMT
வடபழனியில் பெண் பார்க்க அழைப்பது போல நடித்து வாலிபரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி திருக்குறளார் தெருவைச் சேர்ந்தவர் காளிசரண்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் திருமணம் செய்ய பெண் தேவை என தனியார் திருமண தகவல் மையம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்திருந்தார்.

நேற்று மாலை காளிசரணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தங்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் பார்த்து விட்டோம் நேரில் வந்தால் பெண்ணை பார்த்துவிட்டு பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் வடபழனியில் உள்ள வீட்டிற்கு உடனடியாக வருமாறு அழைத்தார்.

இதை நம்பிய காளிசரண் நேற்று இரவு வடபழனி நூறடி சாலை அருகே உள்ள பொன்னம்மாள் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றார். அங்கு கீழே காத்து நின்ற பெண் ஒருவர் காளிசரணை மேலே உறவினர்கள் இருப்பதாக கூறி அழைத்து சென்றார்.

அங்கிருந்த 2 பெண்கள் நாங்கள் போலீஸ் உன்னை சோதனை செய்ய வேண்டும் உன் மீது ஏராளமான புகார்கள் உள்ளது என்று கூறி அவரிடமிருந்துவிலை உயர்ந்த ஐபோன், செயின் மோதிரம் உள்பட 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து விட்டு காளிசரணை அனுப்பிவிட்டனர்.

இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தனியார் விடுதி மேலாளர் மற்றும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்ற பெண்களை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News