கஜா புயலால் பாதிப்பு: தமிழக அரசின் நிவாரண நடவடிக்கை பாராட்டுக்குரியது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
திருப்பரங்குன்றம்:
மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை பார்வையிட நாளை செல்கிறேன். மத்திய சுகாதாரத்துறை விரைவாகவும், மாநில அரசுக்கு உதவி செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. புயலால் வாழை, தென்னை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் காப்பீடும் உள்ளது. இதற்கு தனித்தனியாக இழப்பீடு கொடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் சந்திக்கும் போது சிலர் கோபப்படுவார்கள். இதை அதிகாரிகள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர். முதல் வரும் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.
இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு உண்டு.
மக்கள் துன்பப்படும் போது கோபப்படுவது இயல்பு தான். அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்துள்ளது. குற்றம் சொல்வது எளிது. எந்தெந்த நேரங்களில் எந்தெந்த உதவிகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கம் அந்தந்த நேரங்களில் செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது. மீட்பு நடவடிக்கையை விட்டு அரசை குறை சொல்லக் கூடாது தங்களால் உதவி செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #TamilisaiSoundararajan