செய்திகள் (Tamil News)
பாண்டிபஜாரில் ஆட்டோவில் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் பணப்பை பறிப்பு
பாண்டிபஜாரில் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் இருந்து பணப்பையை பறித்து சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை:
சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் மார்சலின் கரோல்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த இவர், பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். பாண்டிபஜாரில் நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஓரமாக அமர்ந்து கரோலின் பயணித்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்தனர். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென கரோலின் வைத்திருந்த பணப்பையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி மார்சலின் கரோல் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார்.
திருடப்பட்ட பையில் 3500 அமெரிக்க டாலர், 13 ஆயிரம் சுவிஸ் பவுண்ட், ரூ.5 ஆயிரம் இந்திய பணம் ஆகியவை இருந்தன. இவைகளை மீட்டு தரும்படி புகாரில் அவர் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கொள்ளையர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. #tamilnews
சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் மார்சலின் கரோல்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த இவர், பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். பாண்டிபஜாரில் நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஓரமாக அமர்ந்து கரோலின் பயணித்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்தனர். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென கரோலின் வைத்திருந்த பணப்பையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி மார்சலின் கரோல் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார்.
திருடப்பட்ட பையில் 3500 அமெரிக்க டாலர், 13 ஆயிரம் சுவிஸ் பவுண்ட், ரூ.5 ஆயிரம் இந்திய பணம் ஆகியவை இருந்தன. இவைகளை மீட்டு தரும்படி புகாரில் அவர் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கொள்ளையர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. #tamilnews