இந்தியா (National)

அப்துல்லா குடும்பத்துக்கு பாஜக நன்றியோடு இருக்க வேண்டும்.. மோடியை சாடிய மெகபூபா முப்தி

Published On 2024-09-20 10:35 GMT   |   Update On 2024-09-20 10:35 GMT
  • தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது.
  • தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி என்சிபியை விமர்சிக்கிறார் என்று மெகபூபா விமர்சித்துள்ளார்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18 முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.

இதற்கிடையே நேற்றைய தினம் பிரதமர் மோடி காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவது இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும் என்றார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரும் விசயத்தில் நாங்களும் (பாகிஸ்தான்) தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே பக்கம்" என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் காங்கிரஸ் -என்சிபி கூட்டணியை ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் ஜனநாயக கட்சியின்[பிடிபி] தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி என்சிபியை விமர்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு முக்கிய பங்காற்றிய ஷேக் குடும்பத்துக்கு [அபத்துல்லா குடும்பத்துக்கு] மோடி நன்றி தெரிவிக்க வேண்டும். குறிப்பாக ஷேக் அப்துல்லாவின் முயற்சியினால் தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News