செய்திகள்

ஆலங்குடி அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்- கொலையா? போலீசார் விசாரணை

Published On 2018-12-13 16:15 GMT   |   Update On 2018-12-13 16:15 GMT
ஆலங்குடி அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மனைவி விஜி (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இவர் தான் குடியிருக்கும் மாடி வீட்டின் கீழ் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் முருகேசனுக்கும், அவரது மனைவி விஜிக்கும் இடை யே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக  கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஜி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் விரைந்து சென்று விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீரமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் விஜியின் தம்பி சரவணன் தனது அக்காவை அடித்து கொலை செய்து தூக்கி போட்டு விட்டதாக கீரமங்கலம் போலீசில் புகார் செய்தார். 

இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமாக  என விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News