செய்திகள்
கோவை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கோவை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் சக்தி வேல் (25). குடிப்பழக்கம் இருந்து வந்தது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து விட்டார். இதனால் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.