செய்திகள்

இளம்பெண்ணிடம் பேசியதை தட்டி கேட்டு தந்தையை தாக்கியதால் மாணவர் தற்கொலை

Published On 2019-01-24 10:38 GMT   |   Update On 2019-01-24 10:38 GMT
வாணியம்பாடி அருகே இளம்பெண்ணிடம் பேசியதை தட்டி கேட்டு மாணவனின் தந்தையை தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அருகே உள்ள தகரகுப்பம் கூட்டுபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரத்குமார் (19). திருப்பத்தூரில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இவரது உறவினர் விஜயகாந்த் (19). இவரது சகோதரியிடம் சரத்குமார் அடிக்கடி பேசியதாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா (19), ஆசைத்தம்பி (23), சந்தோஷ் என்கிற பெருமாள் சாமி (26) ஆகியோர் சரத்குமாரை தாக்கினர்.

இதனை தடுக்க முயன்ற கோவிந்தசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

தந்தை தாக்கப்பட்டதால் அவமானம் தாங்காமல் சரத்குமார் மனமுடைந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் இன்று காலை இறந்தார்.

திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News