செய்திகள்

கோவை அருகே தொழிலாளி உள்பட 2 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-01-25 12:20 GMT   |   Update On 2019-01-25 12:20 GMT
கோவை அருகே தொழிலாளி உள்பட 2 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை வீரபாண்டி புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 10 வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் வலி குணமாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக முருகேசன் மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக முருகேசனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமுகையை சேர்ந்தவர் மணியன் (65). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த மணியன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணியன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News