செய்திகள் (Tamil News)
தா.பேட்டை அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
தா.பேட்டை அருகே விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தா.பேட்டை:
தா.பேட்டை அடுத்த வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் ஜவுளிகடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த இந்துமதியை (21) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 மாத பெண்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்துமதி தனது தந்தை வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்து மதிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டதால் முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.