வேலை கொடுக்க மறுத்ததால் கண்டெய்னர் லாரியை கடத்திய டிரைவர் கைது
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் மஸ்தான் கோயில் பகுதியில் ஆஞ்சநேயா டிரான்ஸ் போர்ட்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த தாவீது ராஜா. லாரி டிரைவர் வேலை பார்த்து வந்தார்.
அடிக்கடி மது போதையுடன் லாரியை ஓட்டியதால் அவரை உரிமையாளர் வேலையை விட்டு நீக்கி உள்ளார்
இதனால் மனமுடைந்து அப்பகுதியை சுற்றிதிரிந்து வந்த தாவீது ராஜா நேற்று இரவு மது போதையில் டிரான்ஸ்போர்ட் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து மாதவரம் ரெட்டேரி பகுதியில் வாகன சோதனையில் இருந்த போலீசார் நள்ளிரவு லாரியை மடக்கி பிடித்தனர். லாரியில் இருந்த தாவீது ராஜா தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியை மீட்டு தப்பி ஓடிய ராஜாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருவொற்றியூர் பகுதியில் சுற்றி திரிந்த தாவீது ராஜாவை திருவொற்றியூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் வேலை கொடுக்க மறுத்ததால் பழி வாங்க எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.