செய்திகள் (Tamil News)

வேலூர் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Published On 2019-03-30 14:05 GMT   |   Update On 2019-03-30 14:05 GMT
வேலூர் அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவம்பட்டி:

வேலூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சென்னகேசவன். இவரது மனைவி ஜோதி (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சென்னகேசவனுக்கும்- ஜோதிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனால் மனமுடைந்த ஜோதி நேற்று மாலை 4 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். இதில் அவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். 

அந்த வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் கிணற்றில் ஜோதி பிணமாக இருப்பதை கண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குபதிவு செய்து ஜோதி குடும்ப தகராறு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News