செய்திகள் (Tamil News)
தற்கொலை

நாகர்கோவிலில் மனைவி தாயார் வீட்டிற்கு சென்றதால் வாலிபர் தற்கொலை

Published On 2019-08-27 12:36 GMT   |   Update On 2019-08-27 12:36 GMT
நாகர்கோவிலில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தாயார் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வைத்திய நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவரது மனைவி துர்கா (25). மணிகண்டன் குடித்து விட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மணிகண்டன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை துர்கா கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் துர்கா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனையுடன் மணிகண்டன் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டின் கதவு நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கு  மணிகண்டன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டார் போலீசில் துர்கா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News