செய்திகள் (Tamil News)
கோப்பு படம்

சத்தியமங்கலத்தில் 3 மனைவிகாரர் தற்கொலை

Published On 2019-09-18 09:44 GMT   |   Update On 2019-09-18 09:44 GMT
சத்தியமங்கலத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 மனைவிகாரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வடவள்ளி வேடர் காலனியை சேர்ந்தவர் கபில்தேவ் வயது 34. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா, கவிதா, சுனிதா என்ற 3 மனைவிகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஆனது. இதில் மனைவி கோபமுற்று வெளியே சென்றதால் மனமுடைந்த கணவன் வீட்டில் தனியாக இருக்கும்போது மது அருந்திக்கொண்டு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று கபில்தேவின் உடலை கைப்பற்றினார்கள். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News